Trending News

தெஹிவளையில் 6 வாள்களுடன் வர்த்தகர்கள் கைது

(UTV|COLOMBO) தெஹிவளை பிரதேசத்தின் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் மேலுமொரு வர்த்தகரும் 6 வாள்களுடன்  இன்று(29) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 5 மா​டிகளைக் கொண்ட கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டிலிருந்தும், மற்றொரு வர்த்தகரின் வீட்டிலிருந்தும் இந்த வாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும் கைதுசெய்யப்பட்ட வர்த்தகர்களுள் ஒருவர் வாகன விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் ஏனைய வர்த்தகர் மருந்துப் பொருட்கள் விற்பனை நிலையத்தின் உரிமையாளர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசர் விளக்கமறியலில்…

Mohamed Dilsad

උසස් පෙළ ප්‍රතිඵළ නැවත සමීක්ෂණ සඳහා අයදුම් කිරීමේ කාලය දීර්ඝ කරයි.

Editor O

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது

Mohamed Dilsad

Leave a Comment