Trending News

அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது

(UTV|COLOMBO) இலங்கை வடக்கு கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியிில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

நேற்றிரவு(25) மற்றும் இன்று(26) அதிகாலை அனலைத் தீவிற்கு வடமேல் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த மீனவர்களின் 3 ட்ரோலர் மீன்ப்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் , மற்றும் படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் உதவி மீன்பிடி பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

 

Related posts

Leave for SLTB drivers suspended until Jan 1st

Mohamed Dilsad

ஆசியா பசுபிக் பிராந்தியத்தின் சர்வதேச தொழில் முனைவோருக்கான அமர்வு முதல் தடவையாக இலங்கையில்!

Mohamed Dilsad

Sajith to launch campaign on Oct. 10

Mohamed Dilsad

Leave a Comment