Trending News

எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான ரயில் சேவை ஆரம்பம்

(UTV|COLOMBO) எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் மாத்தறையிலிருந்து பெலியத்த வரையான புகையிரத சேவை ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, தற்போது கரையோர மார்க்கமாக கொழும்பு – கோட்டையிலிருந்து மாத்தறை வரை பயணிக்கும் அனைத்து ரயில்களும் பெலியத்த வரை பயணிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பெலியத்த வரையான தூரம் 26 கிலோமீற்றர்களாகும்.

இலங்கையில் மிக நீளமான சுரங்க ரயில் பாதை மாத்தறை – பெலியத்த பாதையிலேயே அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த ரயில் மார்க்கத்தில், கெகணதுர, பம்பரென்த, வெவுருகன்னல, பெலியத்த ஆகிய ரயில் நிலையங்களும் பிலதுவ மற்றும் வெஹெரஹேன ஆகிய உப ரயில் நிலையங்களும் உள்ளடங்குகின்றன.

 

 

 

 

 

 

Related posts

மஹிந்த தலைமையில் இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் சந்திப்பு

Mohamed Dilsad

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி மு‌‌ஷரப் மருத்துவமனையில் அனுமதி

Mohamed Dilsad

ப்ரியா ஆனந்தை அப்படி பார்க்கவில்லை! கௌதம் கார்த்திக் விளக்கம்

Mohamed Dilsad

Leave a Comment