Trending News

கடல் எல்லையை மீறும் மீனவர்கள் மீது கடுமையான சட்டம்

(UTV|COLOMBO) இலங்கை கடல் எல்லையை மீறும் வௌிநாட்டு மீனவர்கள் மீதான சட்டத்தை கடுமையாக்கவுள்ளதாக, கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான 2 சட்டமூலங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக, திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்துள்ளார்.

கடந்த மாதத்தில் மாத்திரம் 15 இந்திய மீனவர்கள் 7 படகுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதிய சட்டங்களின் அடிப்படையில் குறித்த 7 படகுகள் மீதும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.

அதேவேளை, கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை, இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மீண்டும் இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் திணைக்களத்தின் தேடுதல் பிரிவின் பணிப்பாளர் கல்யாணி ஹேவாபத்திரண தெரிவித்துள்ளார்.

 

 

 

Related posts

குருணாகல் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் மக்கள் காங்கிரசில் இனைவு

Mohamed Dilsad

ஐக்கிய தேசிய முன்னணினர் மற்றுமொரு கலைந்துரையாடல் இன்று

Mohamed Dilsad

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 130 ஆவது இடத்தில் இலங்கை

Mohamed Dilsad

Leave a Comment