Trending News

இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்

(UTV|COLOMBO)-மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

 

 

 

Related posts

පාර්ලිමේන්තු මන්ත්‍රී විශ්‍රාම වැටුප ගැන යළි සලකා බලන්න – හිටපු කතානායක කරු ජයසූරිය

Editor O

அவுஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 118 ஓட்டங்கள் நிர்ணயிப்பு

Mohamed Dilsad

President will not approve Ministerial posts to SLFP Parliamentarians who act against party

Mohamed Dilsad

Leave a Comment