Trending News

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று அனுஷ்டிப்பு

(UTV|COLOMBO)-சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று(04) அனுஷ்டிக்கப்படுகிறது.

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்து நிறுத்தி பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாத்து, சிறுவர்நேய சூழலை கட்டியெழுப்புவது இதன் நோக்கமாகும்.

சகல துஷ்பிரயோகங்களில் இருந்தும் பிள்ளைகளை பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க சலரும் ஒன்றாக பாடுபட வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் என்.என்.அபேயரட்ன கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினத்தை முன்னிட்டு திரு.அபேயரட்ன விசேட செய்தியொன்றை விடுத்துள்ளார்.

பிள்ளைகளை சரியான பாதையில் செலுத்தும் பிரதான பொறுப்பு பெற்றோரை சார்ந்தது. ஏனைய பெரியவர்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளதென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் வீடுகளிலேயே சிறுவர்கள் ஆகக் கூடுதலாக துஷ்பிரயோகங்களுக்கு இலக்காவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

 

Related posts

கடந்த 25 நாட்களுக்குள் கொழும்பு மாவட்டத்தில் 2075 டெங்கு நோயாளர்கள் பதிவு

Mohamed Dilsad

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறிகள் விநியோக விசாரணை அறிக்கை குறித்து பிரதமர் விசேட உரை- (காணொளி)

Mohamed Dilsad

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

Mohamed Dilsad

Leave a Comment