Trending News

இரு வேறு பேருந்து சாரதிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில்-தனியார் பேருந்து சாரதி பலி

(UTV|COLOMBO)-வெலிமடை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் அரச பேருந்து சாரதிக்கும், தனியார் பேருந்து சாரதிக்கும் இடையே நேற்றுப் பிற்பகல் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானார்.
சம்பவத்தில் தனியார் பேருந்தின் சாரதி பலியானதாக காவற்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.வெலிமடை – குருதலாவ பகுதியைச் சேரந்த 40 வயதுடைய தனியார் பேருந்து சாரதியே இந்த மோதலில் உயிரிழந்துள்ளார்.

நேற்றுப் பிற்பகல் பேருந்தின் பயண நேரம் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு, மோதல் நிலைமையாக மாறியதையடுத்தே இந்தக் கொலை இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் அரச பேருந்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் அடங்களாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் காயமடைந்த இரண்டு பேர் காவற்துறையினரின் பாதுகாப்புடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

சிலி நாட்டின் மத்திய பகுதியில் நிலநடுக்கம்

Mohamed Dilsad

ඉන්දියාව බැලස්ටික් මිසයිලයක් අත්හදා බලයි

Editor O

லாவோஸ் நாட்டில் அணைக்கட்டு உடைந்ததில் நுற்றுக்கணக்கானோர் மாயம்

Mohamed Dilsad

Leave a Comment