Trending News

மகன் செலுத்திய பேருந்தில் சிக்கி தந்தை பலி

(UDHAYAM, COLOMBO) – அக்கரப்பத்தனை பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

ஹெட்டனில் இருந்து டயகம நோக்கி பயணிக்கும் தனியார் பேருந்து ஒன்று தனது பயணத்தை முடித்து கொண்டு தரித்து நிற்பதற்காக சென்ற வேளை அதன் சில்லில் சிக்கி குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் குறித்த பேருந்தை செலுத்திய சாரதியின் தந்தை என எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் குறித்த சாரதி அக்கரப்பத்தனை காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் இன்று நுவரெலிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Related posts

விரிந்து பறக்காத வரை சிறகுகளும் பாரம் தான் – “பென்சில் ஸ்கெட்ச்” அப்ஸன் ஒரு கண்ணோட்டம்

Mohamed Dilsad

சிரிய அரசு மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமக்கு அதிகாரம் உண்டு-அமெரிக்கா

Mohamed Dilsad

பாகிஸ்தான் தேவாலயத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு

Mohamed Dilsad

Leave a Comment