Trending News

காட்டு யானையின் தாக்குதலில் இரண்டு சிறுமிகள் பலி

(UTV|COLOMBO)-மகியங்கனை மாபகடவெவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றை நேற்று இரவு காட்டு யானை தாக்கியதில் 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகள் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்று இரவு குறித்த சிறுமிகள் வசித்து வந்த வீட்டை காட்டு யானை தாக்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

 

 

Related posts

Shooting in Front of SAITM Campus

Mohamed Dilsad

Degenkolb wins crash-packed Tour de France stage nine

Mohamed Dilsad

உடவளவை நீர்மட்டம் அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment