Trending News

திருமணம் செய்துகொள்வதற்கான சட்டபூர்வ வயதெல்லை 18 ஆக உயர்வு…

(UTV|MALAYSIA)-மலேஷியா உடனடியாக பால்ய திருமணங்களை நிறுத்தவேண்டுமென ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், திருமணத்திற்கான சட்டபூர்வ வயதெல்லையை எவ்வித விதிவிலக்குகளுமின்றி 18 ஆக உயர்த்த வேண்டும் எனவும், ஐ.நா. மனித உரிமை நிபுணர்கள் கோரியுள்ளனர்.

திருமணம் செய்துகொள்வதற்கான சட்டபூர்வ வயதெல்லையை, 18 ஆக உயர்த்துவதாக மலேஷிய அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இருப்பினும், இடதுசாரி மதத்தலைவர்கள் சிலர், இந்தத்தீர்மானத்தை எதிர்த்து வருவதுடன், பால்ய திருமணங்களை நீக்கக்கூடாது என அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட கணிப்பீட்டின்படி, வயது முதிர்ந்தோர் சிறுமிகளை திருமணம் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

44 வயதான ஆண் ஒருவர், 11 வயது சிறுமியை திருமணம் செய்து வாழ்ந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலான குற்றவியல் சட்டத்தை மலேஷியா உருவாக்கியிருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அம்பாறை-திருக்கோவில் பிரதேச சபை

Mohamed Dilsad

இரண்டாவது நாளாகவும் தொடரும் கனிய மணல் கூட்டுத்தாபன பணியாளர்களின் போராட்டம்…

Mohamed Dilsad

“Impeachment is only way out for Sri Lanka,” Mangala says

Mohamed Dilsad

Leave a Comment