Trending News

இன்னும் சற்று நேரத்தில் எதிர்ப்பு பேரணி; கொழும்பை நோக்கி

(UTV|COLOMBO)-கூட்டு எதிர்க்கட்சியினர் ஒழுங்கு செய்துள்ள ´மக்கள் பலம் கொழும்புக்கு´ எதிர்ப்பு பேரணி இன்று பிற்பகல் 02.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் பேரணியில் கலந்து கொள்வதற்காக கொழும்பிற்கு வௌி இடங்களில் இருந்து பஸ்கள் மூலம் மக்கள் வருகைதந்த வண்ணமுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இன்று அலுவலக நாள் என்ற போதிலும் கொழும்பு நகர வீதிகள் நெரிசலற்று இருந்ததை அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் அலரி மாளிகை மற்றும் விஷேட மேல் நீதிமன்ற பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதையும் அவதானிக்க முடிந்துள்ளது.

இந்த எதிர்ப்பு பேரணியில் கலந்து கொள்வதற்காக வடக்கில் இருந்து 18 பஸ்கள் வருவதாகவும், யாழ்ப்பாணத்தில் இருந்து 02 பஸ்களில் சுமார் 100 பேர் கொழும்புக்கு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரயில் குறுக்கு வீதியில் பயணித்த 8 பேருக்கு அபராதம்

Mohamed Dilsad

සෞඛ්‍ය ප්‍රවර්ධන කාර්යංශයෙන් ජනතාවට දැනුම් දීමක්

Mohamed Dilsad

Brexit bill: Lords pass landmark legislation on leaving EU

Mohamed Dilsad

Leave a Comment