Trending News

உயர்தரப் பரீட்சையால் பிற்போடப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி

(UTV|COLOMBO)-தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்று 3 ஆண்டுகள் நிறைவடையும் ஆகஸ்ட் 17 ஆம் திகதி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மேற்கொள்ளப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று  (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான கலந்துரையாடல்களை அடுத்து, க.பொ.த. உயர்தரப் பரீட்சை நடைபெற உள்ளதால் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி பிற்போடப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

இறுதி போட்டிக்கு முன்னேறிய சென்னை

Mohamed Dilsad

Discussions to commence direct flights from Colombo to Kathmandu

Mohamed Dilsad

Permanent houses for families in high risk landslide zones

Mohamed Dilsad

Leave a Comment