Trending News

பரீட்சையை இலகுபடுத்துவது குறித்து ஆராய குழுவொன்று நியமனம்

(UTV|COLOMBO)-பாடசாலைகளில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் பரீட்சைகளை இலகுபடுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் பரீட்சைகள் திணைக்களத்தின் சிரே‌ஷ்ட அதிகாரிகள் 5 பேர், விசேட வைத்திய நிபுணர்கள் 5 பேர் மற்றும் கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 1, 2 மற்றும் 3 ஐ சேர்ந்த மாணவர்களின் பரீட்சைகளை இலகுபடுத்துவது தொடர்பில் இந்தக் குழு விசேட ஆய்வினை முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆரம்பப்பிரிவு மாணவர்களின் மனநிலைக்கு ஏற்றவிதத்தில் பரீட்சை நடைமுறையை மாற்றுவதே இதன் நோக்கமாகும்.

இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தவுடன் அதனை கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

උගන්ඩාවේ මුදල් සඟවා ඇතැයි දේශපාලන වේදිකාවක ප්‍රසිද්ධියේ ප්‍රකාශ කළ තැනැත්තියට එරෙහිව ශ්‍රේෂ්ඨාධිකරණයට පැමිණිල්ලක්

Editor O

நாட்டின் சில பகுதிகளில் தடைப்பட்டிருந்த மின் விநியோகம் வழமைக்கு

Mohamed Dilsad

8 Lankans trapped in a ship for four months, rescued

Mohamed Dilsad

Leave a Comment