Trending News

ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும்- ஜனாதிபதி

(UTV|COLOMBO)-மாணவர்களை திறமையானவர்கள், திறமையற்றவர்கள் என்ற பாகுபாடின்றி, ஆசிரியர்கள் அனைத்து மாணவர்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் மாணவராக இருந்தக் காலப்பகுதியில் தமக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் தம்மையும் ஏனைய சில மாணவர்களையும், தாழ்த்தும் வகையில் நடந்துக் கொண்டார்.

அவ்வாறான நிலையில் மாணவர்களின் மனநிலையில் ஏற்படும் தாக்கம், அவர்களால் கற்க முடியாத நிலையை ஏற்படுத்தும்.

தற்போதும் இந்த நிலைமை தொடர்கிறது.

அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியது அவசியமாகும்.

அல்லாத பட்சத்தில் மாணவர்களை முன்னேற்ற முடியாத நிலை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிங்கிரியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.அல்லாத பட்சத்தில் மாணவர்களை முன்னேற்ற முடியாத நிலை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

SLFP was protected even during hard times- former president

Mohamed Dilsad

இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம்…

Mohamed Dilsad

புளூமென்டல் சங்க கைது

Mohamed Dilsad

Leave a Comment