Trending News

பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கலந்துரையாடல்

பிரதி சபாநாயகர் பதவி தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து சபையில் அறிவிப்பதாக, சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

அந்த பதவியில் இருந்து திலங்கசுமதிபால விலகியதை அடுத்து ஏற்பட்ட வெற்றிடம் இன்னும் நிரப்பப்படவில்லை.

இது தொடர்பில் நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதன்போது சபாநாயகர் இந்த பதிலை வழங்கினார்.

அதேநேரம், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடன உரை தொடர்பில் நேற்றையதினம் விவாதம் இடம்பெற்றது.

இதில் உரையாற்றிய தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மலையக மக்களின் பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Bale scores as Real beat Espanyol

Mohamed Dilsad

பொறுமையுடன் செயல்படுமாறு கோரிக்கை

Mohamed Dilsad

டிக்கோயா வீதியில் ஒருவாரமாக உடைப்பெடுத்த நிர் குழாய் பொது மக்கள் விசனம்

Mohamed Dilsad

Leave a Comment