Trending News

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விரைவில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விரைவில் முன்வைக்க மகிந்த அணியினர் தீர்மானித்துள்ளனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ஷவின் தலைவர் நேற்று, மகிந்த அணியின் முக்கியஸ்த்தர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று நடைபெற்றிருந்தது.

இதன்போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் மற்றும் தங்களது எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை மகிந்த அணி கடந்தவாரமே முன்வைக்க திட்டமிட்டிருந்தது.

எனினும் கண்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளை அடுத்த சூழ்நிலைகளால் இந்த பிரேரணையை தற்காலிகமாக பிற்போடுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கிணற்றில் விழுந்து இரண்டு சிறுவர்கள் பலி

Mohamed Dilsad

பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம்

Mohamed Dilsad

வசந்த கரன்னாகொடவிடம் 06 மணி நேரம் விசாரணை

Mohamed Dilsad

Leave a Comment