Trending News

தூக்கில் தொங்கிய மூன்று பிள்ளைகளும் கொலையா? – [Photos]

(UDHAYAM, COLOMBO) – மாத்தறை – கம்புறுபிட்டிய – பெரலியதுர பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகள் மற்றும் தந்தையின் மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் தற்போது இடம்பெற்றுவருகிறது.

தற்போது சம்பவம் இடம்பெற்றுள்ள வீடு மற்றும் அதனை சுற்றிவுள்ள பகுதியில் காவற்துறை பாதுகாப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மூன்று பிள்ளைகள் மற்றும் அவரின் தந்தையும் வீட்டின் முன்னால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமையை பிரதேசவாசிகள் நேற்று கண்டுள்ளனர்.

44 வயது தந்தையும், அவரது 10 மற்றும் 16 வயது மகள்களும், 14 வயது மகனுமே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முன்னர் வீட்டுக்கு தீவைத்துள்ளதாக தெரிவயந்துள்ளது.

எனினும் தந்தை தனது மூன்று பிள்ளைகளையும் கொலை செய்து தூக்கில் தொங்கவைத்துள்ளதாக தான் சந்தேகிப்பதாக பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/06/01-1.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/06/02-1.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/06/03-1.jpg”]

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/06/04.jpg”]

Related posts

சற்று முன்னர் நியுசிலாந்து பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கி சூட்டு

Mohamed Dilsad

Rain after 1.00 this evening – Met. Dept.

Mohamed Dilsad

நாலக்க டி சில்வா இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையில்…

Mohamed Dilsad

Leave a Comment