Trending News

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியன்

(UDHAYAM, COLOMBO) – ஆறாவது இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சம்பியனாகியுள்ளது.

இந்த அணி சம்பியன் கிண்ணத்தை வென்றுள்ள மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இலங்கை வீரர் லசித் மாலிங்க விளையாடினார். மஹேல ஜயவர்த்தன இந்த அணியின் பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார்.

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2017/05/Mhela.jpg”]

றைசிங் பூனே சுப்பர் ஜயன்ட் அணிக்கு எதிராக ஹைதராபாத்தில் நேற்று இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் மும்பை அணி ஒரு ஓட்டத்தால் வெற்றிபெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களைப்பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சுப்பர் ஜயன்ட் அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 128 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

Related posts

Monsoon kills dozens in Nepal, India and Bangladesh

Mohamed Dilsad

කැබිනට් සංශෝධනය ලබන සඳුදා

Mohamed Dilsad

உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுத்தொடர் – எகிப்தும், சவூதி அரேபியா வெளியேற்றம்

Mohamed Dilsad

Leave a Comment