Trending News

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு

(UTVNEWS|COLOMBO) – ஹம்பாந்தோட்டையில் இருந்து கல்முனை ஊடாக பொத்துவில் வரையிலும் புத்தளத்தில் இருந்து திருகோணமலை ஊடாக மன்னார் மற்றும் காங்கேசந்துறை கடல் பகுதிகளில் அடிக்கடி காற்றின் வேகம் 55 தொடக்கம் 65 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும் வளிமண்டலவியல் திணைக்களம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்காலிகமாக 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை காற்று வீசும் பொழுது கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதுடன் இடியுன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும், தரைப்பகுதியில் காற்றின் வேகம் 50 கிலோ மீற்றர் வரையில் அடிக்கடி அதிகரிக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இதனால் கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

සංචාරකයින් 1,338 දෙනෙකු, ගුවන්තොටුපොළෙන් රියදුරු බලපත්‍ අරගෙන

Editor O

மனித கொலைகள் தொடர்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபரொருவர், துப்பாக்கியுடன் கைது

Mohamed Dilsad

உலகின் மிக சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் ஏஞ்சலா மெர்க்கெல் முதலிடம்

Mohamed Dilsad

Leave a Comment