Trending News

மலையகத்தில் நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரிப்பு

(UTVNEWS|COLOMBO) – மத்திய மலைநாட்டின் சில பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக, மலையகத்திலுள்ள நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேல் கொத்மலை, விமலசுரேந்திர, காசல்ரீ ஆகிய நீரேந்தும் பகுதிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளமையினால் இன்று(20) நீரேந்தும் பகுதிகளில் வான்கதவுகள் திறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

அந்தவகையில் விமலசுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு மேலாக நீர் வெளியாகுவதோடு, மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டிருந்தது.

அத்தோடு காசல்ரீ நீர்தேகத்தின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. இதனால் நீர்தேக்க பகுதிகளில் தாழ்வான பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களை அவதானத்துடன் இருக்குமாறு அதிகாரிகளினால் பணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கை அகதிகள் கனடாவில் அகதி அந்தஸ்த்து கோரியுள்ளனர்

Mohamed Dilsad

අධිකරණ නියෝග පිළිබඳ යූටියුබ් කරුවන්ගේ ප්‍රකාශ ගැන නීතීඥ සංගමයෙන් නිවේදනයක්

Editor O

පක්ෂ සහ අපේක්ෂකයන් ප්‍රවර්ධනය කිරීමට වාහනවල අළවා ඇති ස්ටිකර් වහාම ගලවන්න – මැතිවරණ කොමිෂමෙන් පොලීසියට නියෝග

Editor O

Leave a Comment