Trending News

பாராளுமன்ற உறுப்பினரின் மகன் உள்ளிட்ட அறுவருக்கு பிணை

(UTV|COLOMBO) பொரள்ளை பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை டிபென்டர் ரக வாகனத்தில் மோதிவிட்டு விபத்திற்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பில் நேற்று பிணை வழங்கப்பட்டு 06 பேரும் இன்று(26) விடுதலை செய்யப்பட்டனர்.

குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 7 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த போது பிணை நிபந்தனையை பூர்த்தி செய்யாத காரணத்தால் 06 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பிணை நிபந்தனையை பூர்த்தி செய்த பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உள்ளிட்ட 06 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகன் உட்பட ஏழு சந்தேகநபர்களுக்கும் 5 இலட்சம் ரூபாவான இரண்டு சரீர பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சி

Mohamed Dilsad

பலாலி விமான நிலையம் நவீனமயமாக்கப்படும்

Mohamed Dilsad

Navy apprehends four persons with 200 kg of Kerala Cannabis

Mohamed Dilsad

Leave a Comment