Trending News

நாடு முழுவதும் தொடரூந்து ஊடான பொதி பரிமாற்று சேவை பாதிப்பு

(UTV|COLOMBO)-தொடரூந்து நிலைய அதிபர்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களுக்கு இடையிலான முரண்பாடு காரணமாக, நாடு முழுவதும் தொடரூந்து ஊடான பொதி பரிமாற்று சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதிப்பரிமாற்றல் நடவடிக்கையின் போது நடைமுறையில் உள்ள முறைமைகளுக்கு புறம்பாக தொடரூந்து நிலைய அதிபர்கள் செயற்பட்டமையால், இந்த நிலைமை ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

2 வருடங்களாக நிலவிய இந்த முரண்பாடு தற்போது தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றிருந்த போதும் தீர்வு கிடைக்கவில்லை.

இந்த பிரச்சினை காரணமாக நாடு முழுவதும் சுமார் 4000 ஆயிரத்துக்கும் அதிகமான பொதிகள் தொடரூந்து  நிலையங்களில் தேங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

 

 

 

 

Related posts

Thai Cave Rescue: Military drains cave in hope boys can walk out before rains

Mohamed Dilsad

Sri Lanka’s Sherlock Holmes: CID SP Shani Abeysekera now an SSP

Mohamed Dilsad

ஸ்ரீ.சு.கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமனம்

Mohamed Dilsad

Leave a Comment