Trending News

தங்க ஆபரணங்களுடன் மூன்று பேர் கைது

(UTV|COLOMBO)-சட்டவிரோதமாக தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட தங்க ஆபரண தொகையுடன் மூன்று பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில், விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மினுவாங்கொட, ஜாஎல மற்றும் கொழும்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

குறித்த கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள தங்க ஆபரண தொகையின் பெறுமதி சுமார் 40 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்க பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

 

 

 

 

Related posts

ගෑස් ටැංකියේ අර්බුද අස්සේ රවීගේ නම මැතිවරණ කොමිෂමෙන් ගැසට් කරයි.

Editor O

2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டிய விதம் தொடர்பில் டில்வின்

Mohamed Dilsad

கண்டி மாவட்டத்தில் குடிநீர் வழங்கல் திட்டம் பொது மக்களின் பாவனைக்கு

Mohamed Dilsad

Leave a Comment