Trending News

கால்களை இழந்த 200 க்கும் மேற்பட்டோர் புத்தளம் மாவட்டத்தில்

(UTV|COLOMBO)-பல்வேறு விபத்துக்கள் மற்றும் நோய்கள் காரணமாக காலை இழந்த 226 பேர் புத்தளம் மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாக மாவட்ட செயலகத்தின் சமூக சேவை பிரிவின் தேடுதலில் தெரியவந்துள்ளது.

யுத்தம் காரணமாக 43 பேர், மிருக வேட்டையாடுதலுக்கான துப்பாக்கி வெடித்ததில் 17 பேர், விபத்துக்கள் காரணமாக 70 பேர், நோய் மற்றும் பிற காரணங்களால் 96 பேர் இவ்வாறு காலை இழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

காலை இழந்த அதிகமானவர்கள் முண்டலம் பிரதேச செயலாளர் பிரிவில் வசிக்கிறார்கள். அதன் எண்ணிக்கை 35 பேர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 பேர் தங்கொடுவ பிரதேச செயலாளர் பிரிவிலும், 22 பேர் மகவெத, 21 பேர் நவகத்தேகம பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் வாழ்கின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Lightning strike kills one in Ratnapura

Mohamed Dilsad

பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான விவாதம் பிற்போடப்பட்டது

Mohamed Dilsad

ජනාධිපති සහ ඇමති නිල නිවාසවලට කරන්නේ කුමක් ද…?

Editor O

Leave a Comment