Trending News

பொது மக்களுக்கான அறிவுறுத்தல்

(UTV|COLOMBO) பானிப் புயல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவுரைகளில் பொது மக்கள் கூடுதலான கவனம் செலுத்த வேண்டும் என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

புயலினால் ஏற்படும் அனர்த்தத்தை எதிர்க்கொள்ள கூடிய வகையில் இடர் முகாமைத்துவ நிலையம் தனது சகல பிரதேச அலுவலகங்களையும் தயார் நிலையில் வைத்துள்ளது. இராணுவம் பொலிஸார் உதவியையும் அலுவலகம் பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கைக்கு அருகில் வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் கடும் காற்றுடன் எதிர்வரும் 12 மணித்தியால காலப் பகுதி நகரக் கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு கடல் பகுதிகளில் கடற் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தமது நடவடிக்கைளில் இருந்து விலகி இருக்குமாறு நாம் மீண்டும் வலியுறுத்துகின்றோம். நேற்றைய தினம் நாட்டின் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி இடம்பெற்றது. விஷேடமாக மண்சரிவு அனர்த்தம் உள்ள பகுதிகளில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

 

 

 

 

 

Related posts

கொழும்பை நோக்கி வரும் ஐக்கிய தேசிய கட்சியினரின் வாகன எதிர்ப்பு பேரணி

Mohamed Dilsad

Sri Lanka, India hold 29th International Maritime Boundary Line meeting

Mohamed Dilsad

பிரதம நீதியரசர் கே.ஸ்ரீ பவன் இன்று ஓய்வுபெறவுள்ளார்

Mohamed Dilsad

Leave a Comment