Trending News

சில பிரதேசங்களுக்கு இன்று பலத்த மழை…

(UDHAYAM, COLOMBO) – மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் இடியுடன் கூடிய மழை பெய்யகூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய காலி , கொழும்பு , களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான மழை வீழ்ச்சி பதிவாகும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சிலபகுதிகளில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழியக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை , புத்தளம் தொடக்கம் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரை மற்றும ்ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பகுதியில் காற்றின் வேகம் சுமார் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் காரணமாக , குறித்த கடற்பிரதேசங்கள் கொந்தளிப்புடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Sandun Kumara wins first leg

Mohamed Dilsad

Pakistan not renewing Head Coach’s contract

Mohamed Dilsad

“Cannes” ரெட் கார்பெட்டில் மகளுடன் ஐஸ்வர்யா ராய்… (PHOTOS)

Mohamed Dilsad

Leave a Comment