Trending News

காமினி செனரத்தின் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது

(UTV|COLOMBO)-ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கு, கொழும்பு விஷேட நிரந்தர நீதாய மேல் நீதிமன்றத்தில் இன்று (13) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இதன்போது வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை, எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட ​போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்றைய விசாரணையின் போது, கென்வில் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கணக்காளர் மேனக ராஜகருணவிடம் அரச தரப்பு பிரதி சொலிசிஸ்டர் ஜெனரால் சாட்சியம் மேலதிக சாட்சியங்களை பதிவு செய்து கொண்டார்.

 

 

 

 

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு

Mohamed Dilsad

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை

Mohamed Dilsad

பங்களாதேஷ் கடற்படைக்கப்பல் ‘பிஎன்எஸ் பங்கபந்து’ நாடு திரும்பியது

Mohamed Dilsad

Leave a Comment